Tawaran jual rumah yang tidak laku kepada warga asing juga adalah satu langkah memulihkan ekonomi negara.
SELANGOR

தாமான் பூங்கா ராயா ரூமா சிலாங்கூர்கூ வீடுகள் விற்றுத் தீர்ந்தன

சிலாங்கூர், ஜன.24:

புக்கிட் புருந்தோங், தாமான் பூங்கா ராயாவில் எம்கே லெண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நிர்மாணிக்கவிருக்கும் ரூமா சிலாக்கூர்கூ முதல் கட்ட (subfasa 1A) வீடுகள் அனைத்தும் கடந்த ஜனவரி 19 தேதி விற்றுத் தீர்ந்தன.

கட்டுப்படி விலை வீடுகள் வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவிருந்ததாக இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கே.மோகனசந்திரன் கூறினார்.

இந்த முதல் கட்ட வீடுகள், நிர்மாணிக்கப்படவுள்ள 4 கட்ட வீடமைப்புகளில் ஒன்றாகும் என்றும் இந்த வீடுகளுக்கான வரவேற்பு மிகுந்த உற்சாகமளிப்பதாகவும் அவர் சொன்னார்.

வாடகை வீட்டுக்குப் பதில் சொந்த வீட்டில் குடியிருக்க விரும்பும் மக்களுக்கு குறிப்பாக சிலாங்கூர் மக்களுக்கு உதவ தமது நிறுவனம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகளின் வடிவமைப்பு, மறு வடிவமைப்புக்கான செலவின சேமிப்பு, அனைத்து வசதிகள் ஆகியன இந்த வீடுகளை உடனடியாக வீற்றுத் தீர்ந்ததற்கான காரணங்களில் அடங்கும் என்றார் அவர்.


Pengarang :