SELANGOR

தைப்பூசத்தை முன்னிட்டு 2 முகப்பிடங்களை எம்பிஏஜே மூடுகிறது

ஷா ஆலம், ஜன.18:

தைப்பூசத்தை முன்னிட்டு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மெனாரா எம்பிஏஜே 4ஆவது மாடியில் உள்ள ஓரிட சேவை முகப்பையும் மெலாவாத்தி கிளையின் கட்டண முகப்பிடத்தையும் வரும் திங்கள்கிழமை மூடவிருக்கிறது.

இவ்விரு முகப்பிடங்களும் ஜனவரி 22 ஆம் தேதி காலை மணி 9 தொடங்கி மாலை மணி 5 வரை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அதன் தொடர்பு பிரிவு அதிகாரி நோர்ஹயாத்தி அகமட் கூறினார்.

விடுமுறை காலத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இ-வங்கியல் (iCOMM) சேவையைப் பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்தலாம்.

எனவே, இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்பும் பொது மக்கள் 03-42857004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :