SELANGOR

பூலாவ் இண்டா இகியாவில் 300 வேலை வாய்ப்புகள்!

பெட்டாலிங் ஜெயா, ஜன.30:

2020ஆம் ஆண்டு செப்டம்பரில் செயல்படத் தொடங்கவிருக்கும் இகியா விநியோக மையத்தில் 300 வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன.

தகுதியான தொழில்திறன்மிக்க தொழிலாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இது ஒரு மிகப் பெரிய தொழில் மையமாக அமையவிருக்கிறது. இதன் பெரும்பகுதி பணிகளை ரோபோட்டுகளும் தானியங்கி தொழில்நுட்பங்களும் நிறைவு செய்யவுள்ளன. எனவே, தொழில்திறன்மிக்க தொழிலாளர்கள் மட்டுமே இங்கு பணிக்கு அமர்த்தப்படுவர்.” என்றார் அமிருடின்.

இந்த வேலைவாய்ப்புகளுக்கு பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் வரவேற்கப்படுவர் என்று 2018 ஆண்டு சிலாங்கூர் முதலீட்டாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் சிலாங்கூர்கினியிடம் அமைருடின் தெரிவித்தார்.

முன்னதாக, கிள்ளான், பூலாவ் இண்டாவில் நிர்மாணிக்கப்படும் இகியா விநியோக மையத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மந்திரி பெசார் அமைருடின் கலந்து கொண்டார்.


Pengarang :