SELANGOR

2019-இல் வெ.7.5 பில்லியன் முதலீடு!

பெட்டாலிங் ஜெயா, ஜன.30:

சிலாங்கூர் மாநிலம் இவ்வாண்டில் 7.5 பில்லியன் வெள்ளி முதலீட்டைக் கவரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் அமைருடின் ஷாரி கூறினார்.

இது நிலையில்லாத உலக பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டும் நடப்பு சூழலை அடிப்படையாக கொண்டும் கணிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

“சிலாங்கூரின் பொருளாதார நிலைத்தன்மைக்கு தொழில்துறை மற்றும் முதலீட்டு துறை முக்கிய பங்காற்றுகின்றன.”

“முதலீட்டாளர்களுடனான நட்புறவு மற்றும் மாநில அரசின் நிலையான கொள்கை ஆகியவை சிலாங்கூரை மலேசியாவின் முன்னணி துறைமுகமாக திகழச் செய்துள்ளது” என்றார் அவர்.


Pengarang :