SELANGOR

“உலு லங்காட்டை நோக்கி ஒருங்கிணைந்து மேம்பாடு அடைவோம்”: ஒரு பயணம்

பாங்கி, பிப்.15:

ஒன்றிணைந்து மேம்பாடடைவோம் பயணத்தின் முதல் கட்டமாக உலு லங்காட் மாவட்டத்திற்கு இன்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வருகையளித்தார்.

உலு லங்காட் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் நடைபெறும் மாநில ஆட்சி மன்றக் கூட்டத்திற்கு அவர் தலைமையேற்றார்.

பின்னர் அங்குள்ள மஸ்ஜிட் அல்-ஹஸ்னா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பதோடு மக்களுக்கு உதவிப் பொருட்கள் அளிக்கும் விருந்துபசரிப்பிலும் அவர் கலந்து கொண்டார்.

மாலை நேரத்தில் சுங்கை செமினியில் உள்ள வெள்ளத் தடுப்பு நிர்மாணிப்பு தளத்திற்கு வருகை புரிந்தபோது உலு லங்காட் நீர் வடிகால பாசனத் துறை அதிகாரிகளின் விளக்கமளிப்பை செவிமடுத்தார்..


Pengarang :