SELANGOR

சட்டமன்றமும் ஆட்சிக் குழுவும் தனித்தனியாக நிர்வகிக்கப்படுவதில் சிலாங்கூர் முன்னோடி

ஷா ஆலம், பிப்.20:

சட்டமன்றம் மற்றும் ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரங்களைத் தனித்தனியாகப் பிரித்த மாநிலங்களில் சிலாங்கூர் முன்னணி வகிக்கிறது.

மாநில சட்டமன்றத்தின் செயலாளரும் மாநில ஆட்சி மன்றத்தின் செயலாளரும் இருவேறு நபர்களாக இருப்பதே இதற்கு சான்றாகும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுவீ லிம் கூறினார்.

“சட்டமன்றத்தின் செயலாளர் அதன் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனிக்கும் வேளையில் மாநில ஆட்சி மன்றத்தின் செயலாளர் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்பார்” என்று இங் விளக்கமளித்தார்.

எனவே, நிர்வாகமும் சட்டமன்றமும் தனித்தனியாக உள்ளன. இந்நடைமுறையானது சிலாங்கூரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சி என்ற போதிலும் இது முழுமையாக அமல்படுத்தப்படுவதற்கு சில காலம் ஆகும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :