NATIONAL

சிங்கப்பூர் இரண்டாவது பாலத்தில் பஸ் விபத்து பெண்மணி மரணம்

சிங்கப்பூர், பிப்.26:

தொழிற்சாலைப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 வயது பெண்மணி மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், இன்று அதிகாலை, அந்தப் பேருந்து இரண்டாவது இணைப்பு பாலம் வழியாக துவாஸ் சோதனைச் சாவடியை நோக்கி சென்றபோது நடந்தது.

சம்பந்தப்பட்ட பேருந்தில் பயணித்த அந்தப் பெண் விபத்து நடந்த இடத்திலேயே மரணமடைந்ததை மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்தியதாக சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி (ஐசிஏ) தரப்பினர் கூறினர். ஆயினும், அப்பெண்மணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் 11 பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஐசிஏ கூறியது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ஐசிஏ மேலும் .தெரிவித்தது.


Pengarang :