SELANGOR

சிலாங்கூரில் 8,836 பேர் மின்சாரக் கட்டணக் கழிவைப் பெற தகுதி

ஷா ஆலம், மார்ச் 1-

தேசிய மின்சார நிறுவனம் விரைவில் அமல்படுத்தவிருக்கும் 40 வெள்ளி கழிவைப் பெற இம்மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40ஐ சேர்ந்த மொத்தம் 8,836 குடும்பத் தலைவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் கூடிய எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட முடிவை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை அமல்படுத்துவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த மின்சாரக் கட்டணக் கழிவைப் பெற வறிய நிலையிலான குடும்பத் தலைவர்களும் இ-காசே திட்டத்தில் இடம்பெற்றுள்ளவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்று அவர் விளக்கமளித்தார்.

இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற்றவர்கள் 2019ஆம் ஆண்டில் மாதந்தோறும் மின்சாரக் கட்டணத்தில் 40 வெள்ளி கழிவு பெறுவர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :