கோலாலம்பூர், பிப்.26-
செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது இனத்துவேசத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது நஸ்ரி அஜிஸ் மீது அரச மலேசிய போலீஸ் படை விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நேற்று ஒரு புகாரைப் பெற்றதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபுஸி ஹருண் கூறினார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணைக்கு உதவ சிலரது வாக்குமூலங்களும் விரைவில் பதிவு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
விசாரணை நிறைவுற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
இந்த வழக்கு 1948 நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1) கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.