SELANGOR

தேர்தல் விதிமுறையை மதித்து மேம்பாட்டுத் திட்டம் ஒத்திவைப்பு

செமினி, பிப்.27:

இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்னரே செமினியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் தேர்தல் விதிமுறைக்குக் கட்டுப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய முன்னணி ஆட்சி காலம் போன்றில்லாமல், ஜனநாயக நடைமுறைக்கு மதிப்பளிக்கும் வண்ணம் அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அமிரிடின் ஷாரி தெரிவித்தார்.

உண்மையில் அந்த மேம்பாட்டுத் திட்டம் தற்பொழுது மேற்கொள்ள ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும், செமினியில் இடைத்தேர்தல் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு அதை ஒத்திவைத்ததாக அவர் சொன்னார்.

ஆயினும், இந்த இடைத்தேர்தல் முடிவுற்றதும் அந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று அமிருடின் உறுதியளித்தார்.


Pengarang :