NATIONAL

நான்கு முனைப் போட்டியைக் கண்டு பக்காத்தான் அஞ்சவில்லை!

செமினி, பிப்.15:

நான்கு முனைப் போட்டியை எதிர்கொண்ட போதிலும் செமினி சட்டமன்றத் தொகுதியைத் தற்காக்க பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இரண்டுக்கும் அதிகமான போட்டியாளர்களை எதிர்த்து வென்றிருக்கிறது என்று பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

போட்டியிடுவது அவரவரின் உரிமையாகும். அது நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இங்குள்ள சமூக சேவை மைய வளாகத்தில் ஆற்றிய உரையில் முஹிடின் தெர்வித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் 6ஆவது இடைத்தேர்தலில் பக்காத்தானை எதிர்த்து பாஸ் கட்சியும் தேசிய முன்னணியும் தங்களுக்கிடையிலான அரசியல் ஒத்துழைப்பைத் தொடரவுள்ளன.


Pengarang :