SELANGOR

புயல்காற்றினால் பாதிப்புற்றவர்களுக்கு மந்திரி பெசார் கழகம் வெ.1.6 மில்லியன் ஒதுக்கீடு

தஞ்சோங் காராங், பிப்.20:

புயல் காற்றினால் பாதிப்புற்ற 183 பேருக்கு உதவிட சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் 1.6 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

குறைந்த அளவு சேதமடைந்த வீட்டிற்கு வெ.500, மிதமான அளவு சேதமடைந்த வீட்டிற்கு வெ.5,000, கடுமையாகச் சேதமடைந்த வீட்டிற்கு வெ.50,000 என மறுநிர்மாணிப்பு உதவி நிதி வழங்குவதற்காக இந்த ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கை பேரிடரில் பாதிப்புற்றவர்களுக்கு மாநில அரசு தலா 500 வெள்ளி வழங்குகிறது என்று கோல சிலாங்கூர் மாவட்ட அதிகாரி ஷம்சுல் ஷாரில் முகமது நோர் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தின் ஜக்காட் வாரியம் பாதிப்படைந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 300 வெள்ளி வழங்கவிருப்பதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :