SELANGOR

பெல்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிலாங்கூர் சமநிலை கண்டது!

ஷா ஆலம், பிப்.4:

ஷா ஆலம் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் லீக் போட்டியில் பெல்டா யுனைடட்டிற்கு எதிராக சிலாங்கூர் ஆடிய ஆட்டம் 1-1 என்ற புள்ளியில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் இந்த “ரெட் ஜயண்ட் குழு” இங்கிலாந்தைச் சேர்ந்த அதன் இறக்குமதி ஆட்டக்காரர் அந்தோனியோ ஜெர்மன் மூலம் முதல் கோலைப் போட்டு பெல்டாவின் தற்காப்பு கோட்டையைத் தகர்த்தார்.

முதல் பாதி ஆட்டத்தில் மிகவும் அபாரமாக விளையாடிய சிலாங்கூர் ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் அஸ்ரின் சுல்காஃபலி அடித்த கானர் கிக் சிறப்பாக அமைந்தாலும் அதனை எதிரணியின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் வெற்றிகரமாகத் தடுத்தனர்.

ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் பினால்டி பகுதிக்கு வெளியே இருந்து அம்ரி யாஹ்யா செய்த கோல் போட முயன்ற போது துரதிர்ஷ்ட்வசமாக பந்து பெல்டா யுனைடட்டின் கோல் கம்பத்தைக் கடந்து சென்றது,


Pengarang :