NATIONAL

மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் ‘ஈஏசி’விற்கு நல்ல வரவேற்பு!

ஷா ஆலம், பிப்.12:

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கும் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை மன்றத்தை சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

கொள்கை வழியாகவும் மக்கள் நலன் சார்ந்த பரிவுமிக்க நடவடிக்கைகள் வழியாகவும் நாட்டை மீண்டும் சரியான தடத்தில் கொண்டு செல்ல 14ஆவது பொதுத் தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் உறுதி பூண்டது என்று கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஹில்மான் இடாம் கூறினார்.

“இந்த நடவடிக்கையானது வாழ்க்கைச் செலவினம், வேலையில்லா பிரச்னை மற்றும் சொத்துடைமைகளைக் கொண்டிருப்பது போன்ற மக்களின் அன்றாட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் தீவிரவாக இருப்பதை காட்டுகிறது” என்றார் அவர்.

கடந்த ஆண்டு மே 9ஆம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :