SELANGOR

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு சிலாங்கூர் தயார்

ஷா ஆலம், மார்ச் 19-

சிறப்பு கவனம் தேவைப்படும் சூழல் ஏற்பட்டால், மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், மாநிலத்தில் உள்ள மலிவு விலை மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பில் சிறப்பு ஒதுக்கீடு குறித்து வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சின் பதிலுக்காக மாநில அரசு காத்திருப்பதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

எனினும், சிறப்பு ஒதுக்கீடு இல்லை என்றாலும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறையுடனான மாநில அரசின் ஒத்துழைப்பு வழக்கம் போல் சிறப்பாகவே இருக்கும் என்றார் அவர்.

மலிவு விலை மற்றும் நடுத்தர விலை வீடுகளை உட்படுத்தும் விவாதங்கள் வழியாக சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற முடியும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.


Pengarang :