SELANGOR

எம்பிஎஸ்ஏ வாகன நிறுத்துமிடக் கட்டணம் : 21 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை

ஷா ஆலம், மார்ச் 28-

ஷா ஆலம் நகராண்மைக் கழகத்திற்கு உட்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் அதற்கான கட்டணம் கடந்த 21ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் உள்ள ஊராட்சி மன்றங்களில் மிகவும் குறைந்த அளவிலான கட்டணத்தையே இம்மன்றம் விதித்து வந்துள்ளதாக அதன் நிறுவனம் மற்றும் பொது தொடர்புப் பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமது தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் முதல் நாள் தொடங்கி வாகன நிறுத்திமிடத்திற்கான கட்டணம் 20 காசு அதிகரித்து 60 காசு விதிக்கப்படும் என்று அண்மையில் எம்பிஎஸ்ஏ அறிவித்திருந்தது.

வசூலிக்கப்படும் தொகை யாவும் மக்களுக்கான சேவைகளுக்காகவே பயன்படுத்தப்படும் என்பதால் பொது மக்கள் கவலை அடையத் தேவையில்லை என்று அவர் சொன்னார்.

அதேவேளையில், மக்களுக்கு வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்தும் பணியில் எம்பி எஸ் ஏ தொடர்ந்து பாடுபட்டு வருவதாக ஷாஹ்ரின் கூறினார்.


Pengarang :