SELANGOR

கழிவு பொருட்களை கொட்டிய லாரி ஓட்டுநர் கைது

ஷா ஆலம், மார்ச் 19-

கிள்ளான் தாமான் எங் ஆன் வெள்ள நீர் தேக்க குளத்தில், கடந்த வாரம் தொழிற்பேட்டை கழிவுகளைக் கொட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தடுத்து வைத்தனர்.

26 வயதுடைய அந்த சந்தேகத்திற்குரிய ஆடவரை கோலசிலாங்கூர், ஜெராமில் உள்ள வீட்டில் போலீஸ் கைது செய்ததாக வட கிள்ளான் வட்டார போலீஸ் படைத் தலைவர் ஏசிபி நூருல்ஹுடா முகமது சாலே கூறினார்.

சம்பந்தப்பட்ட தொழிற்பேட்டையின் கழிவு பொருட்களை கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் எனச் சந்தேகிக்கப்படும் லாரி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

குறிப்பிட்ட நிறுவனத்தின் கழிவு பொருட்களை அகற்றுவதற்கான குத்தகையை கைதான ஆடவர் பெற்றுள்ளதாக தொடக்கக் கட்ட விசாரணையின் போது தெரிய வந்ததாக நூருல்ஹுடா தெரிவித்தார்.


Pengarang :