SELANGOR

குடிநீர் விநோயகத் தடையா? பொய்யான தகவலை நம்பாதீர்!

ஷா ஆலம், மார்ச் 6-

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 7 இடங்களில் குடிநீர் விநியோகம் தடை பட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் பரவும் தகவல் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பரவிய அந்தத் தகவலில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக சிலாங்கூர் குடிநீர் நிர்வாக நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

இது பொறுப்பற்ற தரப்பினரால் பரப்பட்ட பொய்யான தகவல் என்றும் இதனை பொது மக்கள் புறந்தள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்/

“குடிநீர் விநியோகத் தடை குறித்த உண்மையான தகவலைப் பெற பொதுமக்கள் கூகுள் பிளே அல்லது எப்ஸ்டோர் மூலம் ‘Air Selangor’ என்ற செயலியைப் பதவிறக்கம் செய்யலாம் அல்லது www.syabas.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்” என்றார் அவர்.


Pengarang :