பூச்சோங், மார்ச் 26-
சட்டவிரோதமாக வர்த்தகம் புரியும் 50 அங்காடி கடைகளை சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் புதியதொரு பகுதிக்கு இடம் மாற்றம் செய்யவுள்ளது.
பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கடைகளை நடத்துவோர் மீது விரைவில் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது அக்கடைகள் அனைத்தும் பூச்சோங் பெர்மாயில் உள்ள ஒரு பகுதிக்கு இடமாற்றப்படும் என்றும் எம்பி எஸ்ஜே துணைத் தலைவர் முகமட் சுல்கர்னைன் கூறினார்.
சம்பந்தப்பட்ட அங்காடி கடைகளின் வர்த்தகத்திற்கு பாதிப்பேதும் இல்லாத வகையில் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கே இக்கடைகளை இடமாற்றம் செய்யவுள்ளோம் என்றார் அவர்.
இந்தப் பகுதி தயார் நிலையில் இருப்பதாகவும் எந்த நேரமும் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் அவர் சொன்னார்.