SELANGOR

சிலாங்கூர் குடிநீர் நிறுவனத்திற்கு விருது மந்திரி பெசார் பாராட்டு

ஷா ஆலம், மார்ச் 12-

2018ஆம் ஆண்டு தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான விருதை சிலாங்கூர் குடிநீர் நிர்வாக (ஆயர் சிலாங்கூர்) நிறுவனம் தட்டிச் சென்றது.

இந்த விருதானது மாநில மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்கிட இந்நிறுவனத்திற்கு ஓர் உந்துசக்தியாக அமையும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தமது பாராட்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“2018ஆம் ஆண்டு தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான விருதை பெற்ற சிலாங்கூர் குடிநீர் நிர்வாக (ஆயர் சிலாங்கூர்) நிறுவனத்திற்கு “சபாஷ்” என்று டூவிட்டர் வழி அமிருடின் பாராட்டினார்.

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய மன்றத்தின் ஏற்பாட்டிலான இந்த விருதுக்கு ஆயர் சிலாங்கூர் கோம்பாக் மாவட்ட அலுவலகம் மூலம் தேர்வானது. .

வேலையிடத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை ஊக்குவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.


Pengarang :