SELANGOR

சுங்கை துவா சட்டமன்றம் ஏற்பாட்டில் கராத்தே டோ கோஜு கய் போட்டி

பத்து கேவ்ஸ், மார்ச் 5-

கோம்பாக் ‘கராத்தே டோ கோஜு கய்’ சங்கத்துடன் இணைந்து சுங்கை துவா சட்டமன்ற அலுவலகம் சுங்கை துவா ‘கராத்தே டோ கோஜு கய்’ விளையாட்டுப் போட்டியை முதன் முறையாக வரும் சனிக்கிழமை நடத்துகிறது.

கராத்தே விளையாட்டில் இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆற்றலை வெளிப்படுத்த இந்த போட்டி உதவும் என்று அதன் தலைவர் செல்வநாதன் வைத்தியலிங்கம் கூறினார்.

இந்த கராத்தே விளையாட்டில் தகுதி பெறும் மலேசிய விளையாட்டாளர்கள் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி மணிலாவில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் ‘கராத்தே டோ கோஜு கய்’ போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிப்பர் என்றார் அவர்.

பத்து கேவ்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியை சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் செயலாலர் அப்துல் ரஹிம் அகமது காஸ்டி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

இந்தப் போட்டியில் 130க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பர் என்றும் விளையாட்டைக் கண்டுகளிக்க 200 பெற்றோர்கள் திரள்வர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :