ஷா ஆலம், மார்ச் 22-
மாணவர்களுக்கான சிறப்பு விவேகத் திட்டத்தில் பேருந்து சேவையை வழங்க சிலாங்கூர் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று , பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
மாநிலத்தின் நிதிநிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்தத் திட்டம் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொள்வது அவசியம் என்று அவர் சொன்னார்.
மேலும், தோட்டத் தொழிலாளர் செயற்குழுவின் கீழ் பள்ளி பேருந்து கட்டண உதவித் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இது தவிர்த்து, பேருந்து ஓட்டுநர்களின் வருமானத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் கவனத்தில் கொள்வது அவசியம் என்று இங் குறிப்பிட்டார்.