SELANGOR

மந்திரி பெசாரின் போலீஸ் தின வாழ்த்து

ஷா ஆலம், மார்ச் 25-

இன்று 212ஆம் ஆண்டு போலீஸ் தினத்தைக் கொண்டாடும் அரச மலேசியப் போலீஸ் படையினருக்கு மந்திரி பெசார் அமிருடன் ஷாரி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நாட்டின் அமைதியைத் தற்காக்க போலீஸ் படையினரின் தியாகமும் சேவையும் அளர்ப்பரியவை என்று டூவிட்டர் வழி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டின் கருப்பொருளான போலீசும் சமுதாயமும் பிரிந்திரிப்பது இல்லை என்பது காவல் துறையினருக்கு மலேசிய மக்களுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகிறது என்றார் அவர்.

கோலாலம்பூர், போலீஸ் பயிற்சி மையத்தில் (பூலாப்போல்) 212ஆவது போலீஸ் தினம் இன்று கொண்டாடப்பட்டது.


Pengarang :