SELANGOR

ரொக்கமில்லா பரிவர்த்தனை திட்டம்: சபாக் பெர்ணம் மக்கள் அமோக ஆதரவு

சபாக் பெர்ணம், மார்ச் 18-

இங்குள்ள ஸ்டேடியம் பெசாரில் நேற்று நடைபெற்ற 360 விவேக சிலாங்கூர் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இ- வால்லெட் ( e-wallet) செயலி மூலம் 100க்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் திறக்கப்பட்டன.

திரளான மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டிருந்தது, அவர்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனையை நோக்கி பயணிக்கத் தயாராகி வருவதைக் காட்டுகிறது என்று ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி பிரிவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஃபாஹ்மி ஙா தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியைப் புறநகர் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளதானது அவர்களும் அரசின் திட்டங்கள் குறித்து அறிந்துள்ளதை நிரூபிக்கிறது என்றார் அவர்.

இ-வால்லெட் மூலம் கட்டணங்களைச் செலுத்தும் முறையை புறநகரில் அமல்படுத்துவது சிரமம் என்ற கணிப்பை இது பொய்யாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு இங்குள்ள மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு எனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் டாக்டர் ஃபாஹ்மி சொன்னார்.


Pengarang :