SELANGOR

உலக மாநகாராட்சிகளுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும்

ஷா ஆலம், ஏப்.30-

உலக மாநகரங்கள் சிலவற்றோடு அனைத்துலக ரீதியானத் தொடர்பைக் கொண்டிருக்க ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் உறுதிபூண்டுள்ளது.

இருவழி ஒத்துழைப்பு குறித்து மாநில அரசாங்கத்துடன் விவாதித்து வருவதாக அதன் துணை டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில மாநகரங்களுடன் எம்பி எஸ்ஏ ஒத்துழைப்பு நல்குவது குறித்து மாநில அரசாங்கம் சில பரிந்துரைகளை செய்துள்ள வேளையில் அவற்றின் மீதான மதிப்பீடும் நடைபெற்ற்ய் வருவதாக அவர் சொன்னார்.

தொழில்நுட்பம், கல்வி மற்றும் மாநகர மேம்பாடு தொடர்பாக இந்த மாநகராட்சி மன்றம் வழங்கி வரும் சேவைகளின் தரத்தை மேம்படுத்த இத்தகைய ஒத்துழைப்புகள் அவசியம் என்றார் அவர்.


Pengarang :