SELANGOR

எந்தவொரு நிறுவனத் தயாரிப்பையும் ஆதரிக்கவில்லை! – லொய் சியான்

ஷா ஆலம், ஏப்.30-

எளிதில் கரையக்கூடிய ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் நெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தாம் கோரியதாகப் பரப்பப்படும் பொய்யானத் தகவலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மற்றும் பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் பொறுப்பற்ற தரப்பினரைக் கேட்டுக் கொண்டார்.

தாம் எந்தவொரு நிறுவனத்தின் தயாரிப்புக்கு ஆதரவாகவோ அல்லது புறக்கணிக்கும்படியோ வாட்ஸ்அப் செயலி வழி குரல் பதிவு ஏதும் வெளியிட்டதில்லை என்று ஹீ வலியுறுத்தினார்.

“எனது பெயரையும் பதவியையும் பயன்படுத்தி ஒரு பொய்யானத் தகவல் ஒன்று பரவி வருகிறது. இது போன்ற எந்தவோர் அறிக்கையையும் நான் வெளியிடவில்லை” என்றார் அவர்.

நெகிழிப் பைகளுக்கான சந்தை விரிவானது என்பதை தாம் உணர்ந்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையான வரம்பு மீறிய செயலாகும் என்று அவர் கண்டித்தார்.

 


Pengarang :