SELANGOR

எஸ்.எம்.யூ.இ: மூத்த குடிமக்களுக்கு நேரடியாக நன்மையளிக்கிறது

ஷா ஆலம், ஏப்.30-

மூத்த குடிமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் உருமாற்றம் கண்ட எஸ்.எம்.யூ.இ எனும் மூத்த குடிமக்கள் நேச திட்டத்தை சிலாங்கூர் வாரிசான் அறவாரியம் வரவேற்றது.

இந்த நடவடிக்கையானது மூத்த குடிமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் தங்கள் ஆயுட்காலத்திலேயே அனுபவிக்கக் கூடிய சலுகையாகவும் இது அமைந்துள்ளது என்று அறவாரியத்தின் தலைமை நிர்வாகி கான் பெய் நேய் தெரிவித்தார்.

“முன்பு அமல்படுத்தப்பட்ட நடவடிக்கையானது மூத்த குடிமக்கள் மரணமுற்ற பின்னர் அவர்களின் ஈமக்கிரியைகளை நடத்த அவர்களுடைய வாரிசுகளுக்கு வழங்கப்படும் உதவியாக இருந்தது” என்றார் அவர்.

இந்தத் திட்டத்தின் உருமாற்றத்தின் போது, சம்பந்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கு நேரடியாக நன்மை அளிக்கக்கூடிய திட்டமாக இது திகழ்கிறது என்றும் அவர் சொன்னார்.

“மூத்த குடிமக்கள் மீது சிலாங்கூர் மாநில அரசு கொண்டுள்ள அக்கறைக்கு ஏற்ப இந்தத் திட்டம் அமைந்துள்ளதால் இந்த அறவாரியம் இதனை வரவேற்கிறது” என்று கான் கூறினார்.

 


Pengarang :