SELANGOR

சகதி வெள்ளம்: பாதிப்புற்ற பகுதியை ஜுரைடா பார்வையிட்டார்

ஷா ஆலம், ஏப்.1-

தாமான் சியெரா பெர்டானாவில் நேற்றிரவு ஏற்பட்ட சகதி வெள்ளத்தில் பாதிப்புற்ற பகுதியை அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா கமாருடின் பார்வையிட்டார்.

சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 2 மணி நேரம் பாரவையிட்ட ஜுரைடாவுடன் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹுசேனும் உடனிருந்தார்.

வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சருமான ஜூரைடா பொது மக்களின் கருத்துகளை கேட்டறியும் படங்கள் டுவீட்டர் வழி பகிரப்பட்டன.

பாதிப்புற்ற பகுதியை சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த டூவிட்டர் தகவல் தெரிவித்தது.


Pengarang :