NATIONAL

தூய்மையான ஆட்சி வழங்க முடியும் பக்காத்தான் நிரூபித்துள்ளது! – லிம் குவான் எங்

 

சண்டாக்கான், ஏப்.29-

நம்பிக்கை கூட்டணி என்பது செலவழிக்கப்படும் ஒவ்வொரு வெள்ளியும் கவனத்துடனும் விரயமாகாமலும் முறைகேடுகள், துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் ஏதும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஓர் அரசாங்கம் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

மக்களின் வளப்பத்திற்காக மேம்பாட்டுத் திட்டங்கள் யாவும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படுவதை மக்கள் காணலாம் என்றார் அவர்.

இந்தத் தூய்மையான மேம்பாடுகள் யாவற்றையும் மக்கள் விரைவில் அனுபவிப்பர் என்று சண்டக்கான் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் விவியன் வோங் ஷெர் யீக்கு ஆதரவு திரட்டும் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போது கட்சியின் பொதுச் செயலாளருமான குவான் எங் தெரிவித்தார்.

சண்டக்கான் மேம்பாடு குறித்து பேசியபோது ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரே இங்கு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது என்றார் அவர்.


Pengarang :