SELANGOR

பேருந்தின் பிரேக் பழுதடைந்ததற்கான அறிகுறி இல்லை

ஷா ஆலம், ஏப்.8-

சிப்பாங், மாஸ் கார்கோ பகுதிக்கு அருகே நிகழ்ந்த தொழிலாளர் பேருந்து விபத்தில் பேருந்தின் பிரேக் பழுதடைந்ததற்கான அறிகுறி தென்படவில்லை என்று சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ நூர் ஆஸாம் ஜமாலுடின் தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்த பகுதியான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சுற்று வழி ஒரு முச்சந்தி சாலையாகும். ஆயினும் பேருந்து கால்வாயில் விழுந்ததற்காக காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் சொன்னார்.

“இதன் தொடக்க கட்ட விசாரணையில் பிரேக் பழுதடைந்ததற்கான தடயம் ஏதும் இல்லை. அதேவேளையில், பேருந்து ஓட்டுநர் போதைப் பொருள் ஏதும் உட்கொண்டிருந்தாரா அல்லது தூக்க கலக்கத்தில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று நூர் ஆஸாம் கூறினார்.

இந்த விபத்து குறித்த விசாரணையின் முடிவுகள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 


Pengarang :