SELANGOR

ரமலான் மாதத் தொடக்கத்தில் சிலாங்கூரில் இடியுடன் கூடிய மழை

ஷா ஆலம், ஏப்.30-

ரமலான் மாதத் தொடக்கத்தில் சிலாங்கூரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாநிலம் முழுவதிலும் காலை மாலை என இருவேளையிலும் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம், இரவு வேளையில் எந்தவொரு பகுதியிலும் மழை பெய்யாது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்டாலிங், கிள்ளான், சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோலசிலாங்கூர், கோல லங்காட், கோம்பாக் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கை தெரிவித்தது.


Pengarang :