SELANGOR

வாங்கும் சக்திக்கேற்ற வீடுகள் நிர்மாணிப்பை ரூமா ஈடாமான் துரிதப்படுத்தும்

கிளானா ஜெயா, ஏப்.4-

வாங்கும் சக்திக்கேற்ற வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை துரிதப்படுத்தவே சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் (எம்பிஐ) ரூமா ஈடாமான வீடமைப்புத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதும் எதிர்கால பொருளாதாரத்திற்கு அடிப்படையானதுமான வீட்டுடமைத் திட்டத்தை எம்பி ஐ மேற்கொண்டு வருவதாக அதன் நடவடிக்கை பிரிவு அதிகாரி சோஃபியான் அஃபெண்டி அமிருடின் தெரிவித்தார்.

மக்களுக்கு நல்ல வீடமைப்புத் திட்டம் கிடைத்தால், வங்கி துறை சிறப்பாகச் செயல்படும், அதன் தொடர்ச்சியாக மற்ற துறைகளும் சிறந்தோங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிலாங்குர்கூ வீடமைப்புத் திட்டம் போன்றே இந்த வீடமைப்புத் திட்ட மேம்பாட்டாளர்களும் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியத்தின் (எல்பி எஸ்) நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடப்பது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.


Pengarang :