SELANGOR

130 எம்பிகே பணியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்

கிள்ளான், ஏப்.22-

இங்குள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018ஆம் ஆண்டுக்கான கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் (எம்பிகே) சிறந்த சேவையாளர்களாக 130 பணியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்பிகே தலைவர் டத்தோ முகமது யாசினும் கலந்து கொண்டார்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களுக்கு பணிக்கப்பட்ட பணிகளுக்கு அப்பால் சிறந்த சேவைகளை வழங்கும் பணியாளர்களை சிறப்பிக்க ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக டத்தோ யாசின் தமதுரையில் குறிப்பிட்டார்.

“இவர்கள் அனைவரும் அவரவர் துறையின் தலைவர்களால் மதிப்பிடப்படுகின்றனர். அதோடு இவர்களின் கட்டொழுங்கு மற்றும் திறனாற்றலும் கருத்தில் கொள்ளப்படுகின்றன” என்றார் அவர்.


Pengarang :