SELANGOR

2019 ஜப்பான் பிரிமியம் உணவு சந்தை: மந்திரி பெசார் வருகை புரிந்தார்

ஷா ஆலம், ஏப்.18-

தோக்கியோவில் நடைபெறும் 2019 ஜப்பான் பிரிமியம் உணவு சந்தையில் இடம்பெற்றுள்ள மலேசிய உணவு சந்தைக்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வருகை அளித்தார்.

ஹலால் உணவு மற்றும் சைவ, குளுதின் அல்லாத உணவு வகைகளையும் அறிமுகப்படுத்தும் இந்த சந்தை ஐந்தாவது தடவையாக நடைபெறுகிறது என்று இன்வெஸ் சிலாங்கூர் தனது டுவீட்டர் வழியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஏப்ரல் 17 தொடங்கி ஏப்ரல் 19 வரையில் பெவிலியன் மலேசியாவையும் அமிருடின் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்தத் தொடக்க விழாவில் ஜப்பானுக்கான மலேசிய தூதர் கென்னடி ஜவான் மற்றும் மலேசியத் தூதரகத்தின் விவசாயப் பிரிவு பிரதிநிதி முகமது தக்கிடின் ஜக்காரியாவும் கலந்து கொண்டனர்.


Pengarang :