SELANGOR

எம்பிகே: சம்மன்களுக்கு வெ.5 மட்டுமே அபராதம்

கிள்ளான், மே 15-

வாகன நிறுத்துமிட குற்றங்களுக்காக 2011ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சம்மன்களுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) கழிவு வழங்கவிருக்கிறது.

2011ஆம் ஆண்டு தொடங்கி 2015ஆம் ஆண்டு வரையில் வெளியிடப்பட்ட சம்மன்கள் ஒவ்வொன்றுக்கும் 5 வெள்ளி மட்டுமே அபராதமாக செலுத்த வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் கூறினார்.

அதே வேளையில், 2016ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில் வழங்கப்பட்ட சம்மன்களுக்கு 15 வெள்ளி மட்டுமே அபராதமாக விதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

“பொது மக்கள் தங்கள் சம்மன்களைச் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவற்றின் அபராதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வாகன உரிமையாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் அவர்.


Pengarang :