SELANGOR

குழாய் உடைந்ததால் கோம்பாக் வட்டாரத்தில் குடிநீர் விநியோகம் தடைபட்டது

ஷா ஆலம், மே 28-

தாபோங் ஹாஜி வாரிய கட்டடம் மற்றும் அல் அமானியா பள்ளி வாசலுக்கு அருகே உள்ள குடிநீர் குழாய் உடைந்த சம்பவத்தின் காரணமாக கோம்பாக் வட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்திற்கான மூல காரணத்தை ஆராய்ந்து வருவதாக சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனமான ஷபாஸ் வெளியிட்ட அறிக்கை கூறியது.

குடிநீர் விநியோகத் தடையினால் பாதிப்புற்ற பகுதிகளில் கம்போங் இந்தியன் செட்டல்மெண்ட், கம்போங் பாரு பத்து கேவ்ஸ், கம்போங் மெலாயு பத்து கேவ்ஸ், தாமான் சமுத்திரா, தாமான் செலாசே, தாமான் கிரீன்வூட், தாமான் பெர்ஜயா மற்றும் தாமான் கிரீன்வூட் இண்டா ஆகியவைம் அடங்கும் என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

மேலும், கம்போங் சங்காட், தாமான் கோப்பெராசி, தாமான் பெலாங்கி ஜெயா, கம்போங் பத்து மூடா தம்பாஹான், கம்போங் பத்து மூடா , தாமான் பில்லியன் மேவா, பத்து கேவ்ஸ் தொழிற்பேட்டை, தாமான் ஸ்ரீ பத்து கேவ்ஸ் மற்றும் தாமான் டேசா பத்து கேவ்ஸ் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் தடை பட்டதாக அந்த அறிக்கை கூறியது.


Pengarang :