SELANGOR

சுங்கை பூலோ – அசாம் ஜாவா சாலை தரம் உயர்த்தப்பட்டுள்ளது

கோலசிலாங்கூர் மே 8-

சுங்கை பூலோ – அசாம் ஜாவா சாலை மேம்பாட்டு பணி விரைவில் நிறைவடையவிருப்பதால் அங்குள்ள மக்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தரம் உயர்த்தப்படும் அந்தக் கூட்டரசு சாலை உள்ளூர் மக்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதோடு பல்வேறு துறைகள் விரிவாக்கம் காண்பதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவைரியா ஜூலிக்ப்ளி கூறினார்.

இப்பகுதிக்கு வருகின்ற சுற்றுப் பயணிகளுக்கு வசதியான சாலைப் போக்குவரத்து ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

“அதே வேளையில், முன்பு இந்தச் சாலை பழுதடைந்த நிலையில் இருந்ததால் பல விபத்துகள் இங்கே நிகழ்ந்துள்ளன. இந்தச் சாலையின் மறுநிர்மாணிப்பு பணி நிறைவுற்றவுடன் இச்சாலை பாதுகாப்பாக இருக்கும்” என்றார் அவர்.


Pengarang :