SELANGOR

தாமான் ஆயர் மானிஸில் 217 சிலாங்கூர்கூ வீடுகள் – பிஎன்எஸ்பி திட்டம்

ஷா ஆலம், மே 8-

சபாக் பெர்ணம், பஞ்சாங் பெடெனா தாமான் ஆயர் மானிஸ் வீடமைப்புத் திட்டத்தைத் தொடர சிலாங்கூர் மாநில முதலீட்டு நிறுவனம் (பிஎன்எஸ்பி) கடப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் 217 சிலாங்கூர்கூ வீடுகள், 12 கடைவீடுகள் மற்றும் 12 டவுன்ஹவுஸ் வீடுகளை நிர்மாணிக்க தமது தரப்பு திட்டமிட்டு வருவதாக இதன் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஓமார் கூறினார்.

“மாதிரி வீடு தயாராகிவிட்டது. இதன் கட்டுமானப் பணி இவ்வாண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். 2023ஆம் ஆண்டில் இத்திட்டம் நிறைவுபெறும்” என்றார் அவர்.

அதே வேளையில், ஓய்விடப் பகுதி (ஆர் & ஆர்) கட்டுமானம் குறித்து ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் விவாதிக்கப்படும் என்றும் அகமது ஓமார் தெரிவித்தார்.

 


Pengarang :