SELANGOR

தெங்கு பெர்மைசூரியை பிரமிக்க வைத்த “நீலக்கடல் அலைகள்”

கோலசிலாங்கூர், மே 2-

இங்குள்ள கடற்கரையின் நிலக்கடல் அலைகளளின் (புளு டியர்ஸ்) அழகு சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரியையும் அவரின் குழுவினரையும் பிரமிக்க வைத்தது.

கோலசிலாங்கூர் ஸ்கை மிர்ரர் அருகே அம்நிதுள்ள இந்த கடற்கரை அழகை தெங்கு பெர்மைசூரி செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவீ லிம்முடன் படகில் பயணம் செய்து கண்டு களித்தார்.

இந்த வட்டாரத்திற்கு இரவு நேரத்தில் சுற்றுப் ப்யணிகளை அதிகம் ஈர்க்கும் புதிய சுற்றுலா தலம் புளு டியர்ஸ் ஆகும் என்று சுவீ லிம் கூறினார்.

“வேறெந்த இடத்திலும் இல்லாமல் கோலசிலாங்கூரில் மட்டுமே காணக் கிடைக்கூடிய புளு டியர்ஸ் அழகைக் கண்டு ரசிக்க இன்று பெர்மைசூரியை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்” என்றார் அவர்.


Pengarang :