தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய நம்பிக்கைக் கூட்டணியின் ஓராண்டு கால நிறைவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயாவில் அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்  நம்பிக்கைக் கூட்டணியின் 128 வாக்குறுதிகளில் இதுவரையில் 53 நிறைவேற்றப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, மேலும் 283 உருமாற்ற, சீர்திருத்த நடவடிக்கைகள் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு அமுலாக்கக் கட்டங்களில் இருந்து வருகின்றன என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு சவால்களை எதிர் நோக்கும் வேளையில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் 14-வது பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை கூடிய விரைவில் நிறைவேற்ற முனைப்பு காட்டும் என்று உறுதி கூறினார்.