சண்டக்கான், மே 3-
தேசிய முன்னணி அரசாங்கம் விட்டுச் சென்ற மிகப் பெரிய கடன் தொகையை குறுகிய காலத்தில் அடைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பக்காத்தான் அரசாங்கத்திற்கு மந்திர சக்தி ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில் ஏற்பட்ட கடன் சுமையைக் குறைக்க நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு கால அவகாசம் தேவை என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
தேசிய முன்னணி அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள கடனை ஓராண்டு காலத்தில் அடைக்க முடியவில்லை என்று சண்டக்கான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நிற்கும் ஜசெக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது குவான் எங் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கம் நாட்டை கொள்ளை அடித்ததைத் தொடர்ந்து நிலையில் நாடு தற்போது 1எம்டிபி உட்பட 150 பில்லியன் வெள்ளி கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது என்றும் அவர் சொன்னார்.