NATIONAL

ரபிடா: பாக்காத்தான் அரசாங்கத்தின் தர மதிப்பீட்டை ஐந்தாண்டுக்கு பிறகு செய்யுங்கள்

கோலா லம்பூர், மே 10

பக்கத்தான் ஹரப்பான் சாதனைகளை இப்போது மதிப்பிடக்கூடாது ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மதிப்பிடுவதே முறையாகும் என்கிறார் முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ்.

“ஓராண்டு என்பது அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் 20 விழுக்காடுதான்.

“எனவே இப்போது மதிப்பீடு செய்வது அரசாங்கம் அதன் ஐந்தாண்டுப் பதவிக் காலத்தில் என்ன சாதித்தது என்பதைக் காண்பிக்கப் போவதில்லை”, என்றவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

இறையருளுடன் ஹரப்பான் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் மக்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ரபிடா கூறினார்.

#மலேசிய கினி


Pengarang :