NATIONAL

அடிப் மரண விசாரணை : வழக்கறிஞர் பட்டியலுக்காகக் காத்திருக்கிறேன்! – ஜூரைடா

புத்ராஜெயா, ஜூன் 3-

தீயணைப்பு படை வீரர் முகமது அடிப் மரணத்தின் மீதான விசாரணையில் தமது அமைச்சைப் பிரதிநிதிப்பதற்கு சட்டத் துறை தலைவர் பரிந்துரை செய்யவிருக்கும் மூன்று வழக்கறிஞர்களின் பெயர்களுக்காகத் தாம் காத்திருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.
தமது அமைச்சைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் ஷஸ்லின் மன்சோருக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ள வழக்கறிஞரைத் தாமே தேர்ந்தெடுக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

“கடந்த சனிக்கிழமை தேசிய சட்டத் துறை தலைவர் டோமி தோமசை சந்தித்து அடிப் மரண விசாரணை குறித்து கலந்துரையாடினேன். தேசிய வழக்கறிஞர் துறையில் இருக்கும் மூத்த அரசு தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதே சரியான நடவடிக்கையாகும்” என்றார் அவர்.
“வழக்கறிஞர்களின் பெயர் பட்டியலுக்காகக் காத்திருக்கிறேன், அது கிடைத்தவுடன் அவர்களில் ஒருவரை நான் தேர்வு செய்வேன்” என்று தமது அமைச்சின் முன் கூடிய சில உடற்பேறு குறைந்தோருடன் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் ஜூரைடா தெரிவித்தார்.


Pengarang :