SELANGOR

எம்டிகேஎல் ஏற்பாட்டில் மோரிப் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கம்

பந்திங், ஜூன் 19:

மோரிப் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் ஒன்றை கோல லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகேஎல்) வரும் சனிக்கிழமை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநில கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் கோல லங்காட் மாவட்ட அளவிலான இத்திட்டம், வரும் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கும் என்று எம்டிகேஎல் தலைவர் முகமது ஜெயின் அப்துல் ஹமிட் கூறினார்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்போருக்கான பதிவு காலையில் நடைபெறும்.

சிற்றுண்டிக்குப் பின்னர் நடன உடற்பயிற்சி அங்கம் தொடங்கும் என்றும் அவர் சொன்னார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்காட் தேசிய பள்ளி மாணவர்களின் ‘சேஃவ் தி ஓசியன்’ எனும் பாடலுக்கான நடனம் சிறப்பு வருகையாளர்களை உற்சாகப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்..


Pengarang :