NATIONAL

எஸ்பிஆர்எம் புதிய தலைவராக லத்தீஃபா கோயா நியமனம்

கோலாலம்பூர் ஜூன் 4-

தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைவர் பொறுப்பில் இருந்து டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் தமது ஒப்பந்தக் காலம் முடிவதற்குள் விலகுவதால் அதன் புதிய தலைவராக லத்தீஃபா பீபி கோயா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் கடந்த ஜூன் முதல் தேதி நடப்புக்கு வந்தது. இந்த நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் இந்நியமனம் ஈராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அமைந்தது என்றும் பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்தது.

அதே வேளையில், 2020 மே 17-இல் முடிவுறும் ஒப்பந்த காலத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பிய முகமது சுக்ரியின் விண்ணப்பத்தையும் மாமன்னர் ஏற்றுக் கொண்டதாகவும் அது கூறியது.
லத்தீஃபா கோயாவின் நியமனமானது அரசாங்கக் கழகங்களை உருமாற்றும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :