SELANGOR

கிள்ளான் மற்றும் கோல லங்காட் வட்டாரத்தில் தற்காலிக குடிநீர் விநியோகத் தடை

ஷா ஆலம், ஜூன் 3-

செத்தியா ஆலாமில் உள்ள முக்கிய குடிநீர் குழாய் உடைந்ததைத் தொடர்ந்து கிள்ளான் மற்றும் கோல லங்காட் ஆகிய வட்டாரங்களில் உள்ள சில பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது..
பழுதடைந்த குழாயைச் சீர்படுத்தும் பணியைத் தமது தரப்பு மேற்கொண்டு வருவதாக ஆயர் சிலாங்கூரின் வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் நிர்வாக தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

“எதிர்பாராமல் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு வருந்துகிறோம். நிலைமையைச் சீர்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.

“குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் வரை நடப்பு நிலவரம் குறித்து அவ்வப்போது மக்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :