SELANGOR

கோல சிலாங்கூரில் வாகன நிறுத்துமிட கட்டண அதிகரிப்பு ஒத்திவைப்பு!

ஷா ஆலம், ஜூன் 6-

கோல சிலாங்கூர் மாவட்டத்தில் வாகன நிறுத்துமிட கட்டணத்தை அதிகரிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இம்மாவட்டம் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகமாக அந்தஸ்து உயர்த்தப்பட்ட பின்னர் இது அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வாகன நிறுத்துமிட கட்டணத்தை அதிகரிக்கும் ஊராட்சி தரப்பினரின் நடவடிக்கைக்கு தான் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாயிட் ரோஸ்லி கூறினார்.

“இந்த மாவட்டம் தற்போது ஒரு வர்த்தக பகுதியாக இல்லாததால் வாகன நிறுத்துமிட கட்டனத்தை உயர்த்துவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது” என்றார் அவர்.
“புஞ்சாக் அலாம் நகரத்தில் இதுவரை காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மேபேங்க், சி ஐ எம்பி போன்ற வங்கிகள் மற்றும் அரசாங்க அலுவலங்கள் ஏதும் இல்லை” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :