கோலாலம்பூர், ஜூன் 27:
சிலாங்கூரில் உள்ள அனைத்து 12 ஊராட்சி மன்றங்களிலும் திடக் கழிவு துப்புரவு குத்தகைகளை வெற்றிகரமாகக் கைப்பற்றிய கேடிஇபி திடக் கழிவு நிர்வாக நிறுவனம் இதர மாநிலங்களிலும் தனது கிளைகளை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.
இம்மாநிலத்தில் உள்ள 11 ஊராட்சி மன்றங்களின் திடக் கழிவு துப்புரவு குத்தகைகளை கேடிஇபி பெற்றுள்ளது என்று அதன் நிர்வாக அதிகாரி ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
“சிலாங்கூரில் பெற்ற அடைவுநிலை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் எங்களது சேவையைப் பெற விரும்பும் மாநிலங்களுக்குத் தரமான சேவையை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார் அவர்.
“2016ஆம் ஆண்டு முதல் இந்தத் துறையில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்களின் ஆற்றலை நிரூபிப்பதற்கான வாய்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் மேலும் சொன்னார்.