SELANGOR

சுங்கை லங்காட் குடிநீர் குள விவகாரம்: ஷபாஸ் தீர்வு கண்டது

ஷா ஆலம், ஜூன் 7-

தண்ணீரை வடிகட்டும் இயந்திர சாதனத்தின் முகப்பில் குப்பைகள் அடைத்துக் கொண்டதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட தடை சரிசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குடிநீர் பங்கீட்டுக்குத் தேவையான அழுத்தத்தை தண்ணீர் குளம் கொண்டிருப்பது உறுதிசெய்யப்படுவதோடு அங்கிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவும் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் ஆயர் சிலாங்கூர் குழுமம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீரை லாரிகள் மூலம் விநியோகம் செய்யும் நடவடிக்கைகளோடு குடிநீர் விநியோக தடையால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது கூறியது.

எதிர்பாராத இந்த குடிநீர் விநியோக தடை காரணமாக பாதிக்கப்படும் பகுதிகளின் பட்டியலைப் பார்வையிடுமாறு பயனீட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :