கோலாலம்பூர், ஜூன் 26:
பினாங்கு, ஜாலான் தஞ்சோங் பூங்காவில் நிகழ்ந்த நிலச் சரிவு சம்பவம் குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீசா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கையை தாம் அணுக்கமாகக் கண்காணித்து வந்ததாக ஃபேஸ்புக் மற்றும் டூவிட்டர் ஆகியவற்றில் வெளியிட்ட அறிக்கையில் வான் அஜீசா குறிப்பிட்டார்.
“சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மன உறுதியுடன் இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்” என்றார் அவர். செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் தஞ்சோங் பூங்காவில் உள்ள ஒரு சுற்றுலா மையத்திற்கு அருகே நிகழ்ந்த நிலச் சரிவு சம்பவத்தில் நான்கு மியன்மார் பிரஜைகள் உயிரிழந்தனர்.